
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாவீராய தீமஹி
தந்நோ முனீஸ்வர ப்ரசோதயாத்
குலதெய்வ பூஜைகளைப் பங்கமின்றி, மறக்காது நிறைவேற்ற உதவும் வழித்துணை மூர்த்தியே ஸ்ரீ முனீஸ்வரர். பல்வேறான தோஷங்கள், துர்சக்திகளில் இருந்து நம்மைக் காக்கும் வழித்துணை மூர்த்தியே ஸ்ரீ முனீஸ்வரர். முனீஸ்வரன், வாத முனீஸ்வரர், பாத முனீஸ்வரர் போன்ற பல்வகை முனீஸ்வர மூர்த்திகளும் உண்டு. இவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக அருள்பவரே *மூனீஸ்வர மூர்த்தியாவார்.
முனீஸ்வரர் வழிபாடு யாவர்க்கும், யாவைக்குமே. முனீஸ்வரருக்கு உரிய விசேஷமான சக்கரங்கள், காயத்ரீ மந்திர வகைகளும் உண்டு,
ஓஃம் ஐம் க்லீம் ஹ்றீம் ஸ்ரீ முனீஸ்வராய நம:
என்பது ஜாதி, மத பேதமின்றி யாவருமே ஓதிப் பயன் பெற வல்லதாகிய ஸ்ரீ முனீஸ்வரருக்கு உரித்தான எளிமையான மூல மந்திரம். உடல், உள்ள சுத்தியுடன் ஓத வேண்டிய அரும்பெரும் மந்திரம். தவமுனி, லலாடமுனி, பச்சைமுனி, லாடமுனி, அரசமுனி, சந்நாசிமுனி, ஆலமுனி என்று பல்வேறு முனீஸ்வர தேவதா மூர்த்திகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் எண்ணற்றத் தாத்பரியங்கள் உள்ளன.
தாடிக் கொண்டையுடனே தளர்விலா தெய்வ வடிவுற்று
ஓடிப் போன பொருளெல்லாம் கூடியே வரவழைத்து
வாடிய பயிரையும் வளரச் செய்யும் முனீஸ்வரனே போற்றி
ஓம் நமச்சிவாய ஓம்! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய ஓம்! ஓம் நமச்சிவாய!
அர்த்த ஜாம வேளையில் அகிலம் தூங்கும் காலையில் உக்கிரமாய் வருகிறார் உலக நாதன் தளபதி! கச்சை கட்டி வருகிறார்! கையில் தண்டம் ஏந்தியே! கர்ச்ச னையும் புரிகிறார் கடலைப்போல பொங்கியே!
உச்சரிக்கும் மந்திரம் ஓம் கார நாதமாம்! மெச்சு கிற வாத்தியம் மேலைக்கடல் இடிகளாம்! அர்ச்சனைகள் புரிவது ஆடி அடங்கும் தலங்களாம்! இத்தனைக்கும் அதிபதி கால தேவன் தளபதி!
சங்கு நாதசே கண்டி தாரை பரை வாத்தியம் மங்கள மாய் முழங்கிட மகிமை யோடு வருகிறார்! தொங்கும் மீசை கத்தியாம்! துடிக்கும் கண்ணில் சக்தியாம் இங்கி தமாய் நெற்றியில் ஒளிரும் நீறு வெண்மையாய்!
துட்டமிகு தேவதை துடுக்கு செய்யும் யட்சிகள் அத்தனையும் அடக்கவே ஆவேசம் கொண்டு வருகிறார்! கட்டளைகள் போடுவார்! கடுமையாகச் சாடுவார்! அத்தனைக்கும் அதிபதி! ஆனவர்தான் நம்பதி!
காளி ஆடும் வேளையில் கூடத் தாளம் போடுவார்! கால காலன் பூசையில் தாளமோடு ஆடுவார்! சாமமான வேளையில் கோணங் கியாய் மாறுவாய்! சேம நலம் கூறிடச் சித்தர் கோலம் சூடுவார்!
இரவு காலை இடைவெளி இருளும் ஒளியும் சேர்வெளி புரவி மீது ஏறியே புயலைப் போல வருகிறார்! அரியும் அரன் அயனுடன் அன்னை மூவர் போற்றிட புரியும் கடமை விளங்கவே புன்னகையும் புரிகிறார்!
அஞ்செழுத் தை ஓதிடும் அனைவருக்கும் அடிமையாம்! நெஞ்ச மதில் ஈசனை நினைத்த வர்க்கும் அடிமையாம்! தஞ்சமென ஈசனைப் பணிபவர்க்கும் அடிமையாம்! வஞ்ச மின்றி அவர்களை ஆதரிக்கும் வள்ளலாம்!
தில்லை நாதன் சேவடி தினமும் நாடும் எந்தனின் தொல்லை போக்க வருபவர்! தொடர்ந்து என்னைக் காப்பவர்! பிள்ளை களாம் எங்களைப் பெருமையோடு காக்கவே எல்லைக் காவல் தெய்வமாய் என்றும் வாழ்ந்து அருள்பவர்!
என்று வந்த போதிலும் எந்தன் மனம் விழித்திடும்! நன்று ஓதும் மந்திரம் எந்தன் செவி கேட்டிடும்! அந்தப் புரவிக் குளம்பொலி எந்தன் இல்லம் கடக்கையில் சிந்தை யாவும் ஈசனின் சேவடியில் நிலைத்திடும்!