பகவான் ஸ்ரீ கிருஷ்ணா

Sri Krishna Gayatri Mantra

Aum Dhamodaraaya Vidmahe Rukmini Vallabhaaya Dhimahee Thanno Krishna Prachodayath

ஸ்ரீ சம்மோஹன கிருஷ்ண மந்திரம் – இனிய இல்லற வாழ்க்கையை அருளவல்லது. தினமும் மனதில் ஸ்ரீகிருஷ்ணரை துதித்துப் போற்றி, கிருஷ்ணரை ஸ்ரீசம்மோஹன ரூபத்தில் இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபட, குறிப்பாக பெண்களுக்கு இனிய இல்லற வாழ்க்கை அமையும்.

ஸ்ரீ க்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம் | த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம் || பாகம் தட்சிணம் புருஜம் அந்யத் ஸ்திரீடூபிணம் ததா | சங்கம் சக்ரம் சாங்குசஞ்ச புஷ்பபாணம் ச பங்கஷம் || இட்சீ சாபம் வேணு வாத்யம் ச தாரயந்தம் புஷாஷ்டகை | ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம் || ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீ க்ருஷ்ண மாஸ்ரயே

கள்ளவிழ் தாமரைக் கண்கண்ண
னே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ள தும் இல்லது மாய்உலப்
பில்லன வாய்வியவாய்
வெள்ளத் தடங்கட லுள்விட
நாகணை மேன்மருவி
உள்ளப் பல்யோகு செய்தி
இவைஎன்ன உபாயங்களே!

பொ – ரை : ‘தேனோடு மலர்கின்ற தாமரை போன்ற திருக்கண்களையுடைய கண்ணனே! அழிதல் இல்லாததாய் இருக்கின்ற சித்து ஆகியும், அதினின்றும் வேறுபட்டதாய் இருக்கின்ற அழிந்துபோகின்ற அசித்தாகியும், திருப்பாற்கடலில் விஷம் பொருந்திய ஆதிசேஷ சயனத்தின்மேல் பொருந்தித் திருவுள்ளத்தில் பல விதமான காக்கும் உபாயங்களைச் சிந்தனை செய்கிறாய்; இவை என்ன விரகுகள் தாம்! எனக்கு ஒன்று அருளிச்செய்யவேண்டும்,’

காலையில் நீராடிய பின்பு மூன்று முறையும், இரவில் உறங்கப் போகும் முன்பு ஒரு முறையும் சொல்வது அளவற்ற நன்மையைத் தரும். முக்கியமாக, திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையைத் தருவது இந்த ஸ்லோகம். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும்.

ஸ்ரீமந் நாராயணீயத்திலும், ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. மரீசி இயற்றிய அந்த ஸ்லோகத்தை அர்த்தத்துடன் கீழே கொடுத்திருக்கிறோம்.

சம்மோஹன கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!

க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்!
த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்!!

பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா!
ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்!!

இக்ஷீசாபம் வேணுவாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை:!
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்!!

சர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே!!

பொருள்:
தாமரை இதழ் போன்ற கண்களும், பலவிதமான திருவாபரணங்களைத் தரித்தவரும், அழகான வில் போல் வளைந்த திருமேனியும், அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத ரூபமாகத் திகழ்பவரும், சரிபாதி புருஷாகார சரீரரும், சரிபாதி பெண்மையான சரீரமும், வலது நான்கு, இடது நான்கு கைகளில் – சங்கு, சக்கரம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணம், தாமரை மலர், இரண்டு கைகளில் வேணு வாத்யம் (புல்லாங்குழல்) வாசித்தபடி சுகந்த சந்தன திரவியங்களைப் பூசிக் கொண்டும், பலவித மனோஹரமான புஷ்பங்களைத் தரித்தவரும், இன்னல் படும் மக்களை அனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பாற்றி இன்பத்தைத் தர வல்லவருமான மோஹனரூபமாக உள்ளத்தை வசீகரிக்கும் ஸ்ரீ கிருஷ்ணனைத் தியானிக்கிறேன்!

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி