ஸ்ரீ காயத்ரி தேவி


GayatriDevi

Gayatri Mantra 

Aum Bhur Bhuvah Swah, Tat Savitur Varenyam 
Bhargo Devasya Dhimahi, Dhiyo
 Yo Nah Prachodayat

காலையில் சூரியன் விடியும் நேரமோ அல்லது மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரமோ தான் காயத்ரி மந்திரத்தை ஓதுவதற்கான சிறந்த நேரமாகும். இந்நேரத்தில் காயத்ரி மந்திரத்தை ஓதினால், நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து, அதனை உயர்ந்த மற்றும் ஆற்றல் மிக்க நிலையில் பராமரித்திடும்.
இதனால் உங்களுக்கு அளவுக்கு அதிகமான நேர்மறை ஆற்றல்கள் கிடைக்கும். மந்திரத்தை ஓதும் போது இது உங்களுக்கு ஆற்றல்களையும் புத்துணர்ச்சியையும் சீரான முறையில் அளிக்கும்.

ஓம்

பூர் புவஹ ஸ்வஹ
தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத்

பொருளின் சுருக்கம்: வழிபடத்தக்க சூரியனின் ஆன்மிக உணர்ச்சிகளின் மூலம் படரும் தெய்வீகமான ஒளியின் மீது நாம் தியானம் செய்வோம்; அது நம் உள்ளுணர்வை தட்டி எழுப்பும்

தினமும் காலையில் கிழக்குமுகமாக நின்றபடி இரு கைகளையும் துணியால் மூடி, முகத்திற்கு நேராக கைகளை வைத்தபடி ஜெபிக்கவேண்டும். மதியம் கிழக்குமுகமாக அமர்ந்தும், மாலையில் மேற்குமுகமாக அமர்ந்தும் சூரியனைப் பார்த்தபடி ஜெபிக்க வேண்டும். 21 முறை, 108 முறை, 1,008 முறை என்ற எண்ணிக்கையில் ஜெபிப்பதும் நலம்.

11 சொற்களை, கையில் 11 இடங்களைத் தொட்டுத் தொட்டு இந்த ஜெபத்தைச் செய்யவேண்டும். முதலில் சுண்டுவிரல் அடியிலிருந்து மூன்று கணுக்களைத் தொட்டும், மோதிரவிரல் நுனி, நடுவிரல் நுனி, ஆள்காட்டி விரல் நுனி, கட்டைவிரலின்  இரு கணு, ஆள்காட்டி விரல் கீழ்க் கணு, நடுவிரல் கீழ்க் கணு, மோதிர விரல் கீழ்க் கணு என மொத்தம் 11 இடங்களில் தொட்டு ஜெபிக்கவேண்டும்.

உச்சரித்தல் பயன்: வாய் திறந்து ஜெபித்தால் 10 பங்கு பலன்; வாயசைத்து ஜெபித்தால் 100 பங்கு பலன். மவுனமாக ஜெபித்தால் 1,000 பங்கு பலன் பெறலாம்.

சாவித்திரி வேதமாதாச காயத்ரி சரஸ்வதி
சாங்க்ரிதீ பிராம்மணி சாத்வீ
சதாஸர்வார்த்தஸாதினீ
சஹஸ்ராக்ஷீதி நாமானி ஜபாத் பாப ஹராணிச

பொதுப் பொருள்: சாவித்திரியான தேவியே, வேதமாதாவான காயத்ரியே, சரஸ்வதியே, சங்க்ரியே, பிராம்மணி அம்மனே, எப்போதும் அனைத்துலகும் நலம்பெற  அருள்பவளே, ஆயிரம் நாமம் கொண்டவளே, உன் நாமங்களை சொல்வதினாலேயே பாவங்களைப் போக்குபவளே, உனக்கு நமஸ்காரம்.

நமது பாவவினைகளை தீர்க்கும் இந்த ஸ்லோகத்தை ஜெபம் செய்யும்போது ஒரு சொம்பு தண்ணீரை இடக்கரத்தில் ஏந்தி இம்மந்திரத்தை 3 தடவை உச்சரித்து, அந்த நீரைத் தலையில் கொஞ்சம் வலது கையால் தலையில் தெளித்துக்கொண்டு, சிறிதளவை அருந்தியும் வந்தால் சிறந்த பலன்கள் கிட்டும்.

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி