ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்

LaksmiNarasimmar

ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்  அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே  ஸர்வ வியாபிதம் லோகரக்ஷகாம் பாபவிமோசன துரித நிவாரணம் லட்சுமி கடாட்ச சர்வாபீஷ்டம்  அநேகம் தேஹி லட்சுமி நிருஸிம்மா..

ஓம் வஜ்ர நாகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்!

ஓம் ஸ்ரீமதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹப் பரப்ரஹ்மணே நமஹ;

ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ;
ஓம் பூம் பூம்யை நமஹ;
ஓம் நீம் நீளாயை நமஹ.

மேற்கண்டவற்றை குங்குமத்தால் ஒவ்வொன்றையும் 12 முறை கூறி அர்ச்சனை செய்யவும்

24 நிமிடத்தில் பலன் தரும் நரஸிம்ம ஸ்லோகம்!

  1. திருக்கடிகை ஸ்ரீயோக நரஸிம்ஹ ஸ்வாமிக்கு மங்களம்
  2. மாமலையாம் திருக்கடிகையில் வாழ்பவரே உமக்கு மங்களம்.
  3. தேவர்களும் முனிவர்களும் வணங்கிடும் பெருமாளே உமக்கு மங்களம்.
  4. திருமகள் வாழ்கின்ற திருமார்புடைய ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம்
  5. அரங்கத்தில் வாழும் அடியார்கள் தொழும் பெருமாளே உமக்கு மங்களம்.
  6. தீமைகளை அழித்து வேண்டும் வரம் அருளும் நரஸிம்ஹா உமக்கு மங்களம்
  7. வைசாக முழுமதியில் ஸ்வாதி திருநாளில் அவதரித்த பெருமாளே உமக்கு மங்களம்
  8. அபயவரத ஹஸ்தங்களுடன் ஆனந்தம் அருளும் நரஸிம்ஹா உனக்கு மங்களம்
  9. வாரணாசி கயை, ப்ரயாகையிலும் புகழ் மிக்க திருக்கடிகைப் பெருமாளே உமக்கு மங்களம்
  10. வானவரும் மண்ணவரும் போற்றிடும் அக்காரக்கனி ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம்
  11. சீர்மிகு சிறிய திருவடிக்கு ஸங்கம் சக்கரம் அருளிய பெருமாளே உமக்கு மங்களம்
  12. ஸ்ரீஅம்ருதபல வல்லி நாயகி ஸமதே ஸ்ரீயோக ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம் மங்களம் மங்களம்

நரசிம்மரின் சக்தி வாய்ந்த ருண விமோசன கோத்திரம்

?1 தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை
கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

?2 லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

?3 ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

?4 ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

?5 ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

?6 ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

?7 க்ரூரக்ரஹை பீடிதானாம் பக்தாநாம் பயப்ரதம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

?8 வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

?9 ய: இதம் படதே நித்யம் ருணமோச ந ஸம்ஜிதம்அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்

யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்.
பூமி நீளா சமேத ஸ்ரீல்க்ஷ்மி நரஸிம்ம ஸ்வாமினே நம:?

**********************************************************************************************

தன் திருவடியை நம்பிச் சரணடைந்தவர்களுக்கு நன்மை அருள்வதில் நரசிம்மனுக்கு நிகரான தெய்வம் வேறில்லை. பக்தரின் துன்பத்தை உடனே தீர்ப்பவர் என்பதால் ‘நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை” என்றே சிறப்பாக போற்றுவர். தினமும் மாலையில், நரசிம்மருக்கு காய்ச்சிய பாலை பிரசாதமாகப் படைத்து ‘ ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்’ சொல்லி வந்தால் எண்ணிய எண்ணம் எளிதில் நிறைவேறும். ஸ்லோகம் படிக்க சிரமம் இருந்தால் அதன் பொருளைப் படித்தாலும் பலன் கிடைக்கும்.

வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்  விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்!! நிநாத த்ரஸ்த விச்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!

பொருள்: பெரியதும், உருளையானதும், பக்தர்களைக் கண்டு மகிழ்வதுமான அகன்ற கண்களைக் கொண்டவனே! கம்பீர முழக்கத்தால் அனைத்து உலகங்களையும் நடுங்க செய்பவனே! உக்கிர வடிவான நரசிம்மனே! உன்னை நான் வணங்குகிறேன்.

ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்  ஸபலௌகம் திதே ஸூதம்!  நகாக்ரை சகலீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!

பொருள்: திதியின் மகனும், கொடிய அரக்கனுமான இரண்யகசிபு, உலகத்தில் எவராலும் தன்னை கொல்ல இயலாது என செருக்குடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்க நரசிம்மனே! உன்னை நான் வணங்குகிறேன்.

பதா வஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்! புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹா விஷ்ணும் நமாம்யஹம்!!

பொருள்: விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறான். அவனது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளன. விஸ்வ ரூபம் கொண்ட அந்த நரசிம்மனே!  உன்னை நான் வணங்குகிறேன்.

ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீந் யநுக்ரமாத்! ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!

பொருள்: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன. இப்படிப்பட்ட தேஜஸ்(ஒளி) மிக்க விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மனே! உன்னை நான் வணங்குகிறேன்.

ஸர்வேந்த்ரியை ரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா! யோ ஜாநாதி நமாம் யாத்யம் தமஹம் ஸர்வதோ முகம்!!

பொருள்: பொறி, புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ‘ஸர்வதோமுகம்’ என போற்றப்படுகிறான். அந்த நரசிம்மனை நான் வணங்குகிறேன்.

நரவத் ஸிம்ஹவச் சைவ யஸ்ய ரூபம் மஹாத்மந! மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!

பொருள்: பக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவன் விஷ்ணு. பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரசிம்மனே! உன் எழில் கோலத்தை நான் வணங்குகிறேன்.

யந்நாம ஸ்மரமணாத் பீதா பூத வேதாள ராக்ஷஸா ரோகாத் யாஸ்ச ப்ரணச் யந்தி  பீஷணம் தம் நமாம்யஹம்!!

பொருள்: திருநாமத்தை சொல்லக் கூட தேவையில்லாமல், மனதில் சிந்தித்த உடனேயே பூதம், வேதாளம், அசுரர் போன்றவர்களை நடுங்கச் செய்பவனே! தீராத நோயையும் தீர்ப்பவனே! எதிரிகளுக்கு பயம் உண்டாக்குபவனே! நரசிம்மனே! உன்னை நான் வணங்குகிறேன்.

ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய ஸகலம் பத்ர மச்நுதே! ச்ரியா ச பத்ரயா ஜூஷ்ட யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்!!

பொருள்: எந்த ஒருவனை அண்டினால் எல்லா நன்மைகளும் நமக்கு கிடைக்குமோ, நன்மை அருள்வதால் ‘பத்ரை’ என்ற திருநாமம் பெற்றவளான லட்சுமி தாயாரும் யாரை அண்டி இருக்கிறாளோ அத்தகைய சிறப்பு மிக்கவனே! நரசிம்மனே! உன்னை நான் வணங்குகிறேன்.

ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்! பக்தாநாம் நாசயேத் யஸ்து ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!!

பொருள்: பக்தர்களின் மரண காலத்தில் தங்களுக்கு அவர்களின் மீது உரிமை இல்லை என்பதை உணராமல், எமதுõதர்கள் வந்தால் வலிய வந்து காப்பவனும், விரோதியை அழிப்பவனும், மரணத்திற்கே மரணத்தை உண்டாக்குபவனுமான நரசிம்மனே! உன்னை நான்
வணங்குகிறேன்.

தாஸபூதா: ஸ்வத ஸர்வே ஹ்யாத்மாந பாமாத்மந! அதோஹமபி தே தாஸ: இதி மத்வா நமாம்யஹம்!!

பொருள்: இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு தாசர்கள்(அடிமை) ஆவர். அந்த முறையில் நானும் உனக்கு தாசன் ஆவேன். பகவானே! நரசிம்மா! இந்த உண்மையை உணர்ந்து உன்னிடம் சரணடைந்து வணங்குகிறேன்.

சமங்கரேண ஆதராத் ப்ரோக்தம் பதாநாம் தத்வ நிர்ணயம்! த்ரிஸந்த்யம் ய படேத் தஸ்ய ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!!

பொருள்: சிவனாகிய நான், ‘உள்ளத்தில் நரசிம்மனின் மீது கொண்ட அன்பினை சொற்களால் வெளிப்படுத்தினேன்’ இந்த ஸ்லோகங்களை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையிலும் பக்தியுடன் படிப்பவர்கள் அழகு, அறிவு, செல்வம், பக்தி ஆகியவை பெற்று வாழ்வர்.

நமஸ்காரத்மகம் யஸ்மை விதாய ஆத்ம நிவேதநம்! த்யக்தது கோகிலாந் காமாந் அச்நந்தம் தம் நமாம்யஹம்!!

பொருள்: எந்தக் கடவுளை அடைக்கலம் புகுந்து. நம் ஆத்மாவை அர்ப்பணித்தால் வாழ்வில் எல்லா மேன்மைகளும் பெறுவதோடு, துன்பம் எல்லாம் நீங்குமோ அந்த நரசிம்மனை நான் வணங்குகிறேன்.

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்! ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் மருத்யும் நமாம்யஹம்!!

பொருள்: கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர் என்பதால் ‘ஸர்வதோமுகம்’ எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும், எல்லா நன்மைகளையும் தரவல்லவருமான அந்த நரசிம்மனை நான் வணங்குகிறேன்.

  1. ஓம் நரசிம்காய நம
  2. ஓம் மகாசிம்காய நம
  3. ஓம் திவ்யசிம்காய நம
  4. ஓம் மகாபலாய நம
  5. ஓம் உபேந்த்ராய நம
  6. ஓம் அக்நிலோசநாய நம
  7. ஓம் ரவுத்ராய நம
  8. ஓம் சவுரயே நம
  9. ஓம் மகா வீராய நம
  10. ஓம் சிவிக்ரம பராக்ரமாய நம
  11. ஓம் அரிகோலா கலாய நம
  12. ஓம் சக்ரிணே நம
  13. ஓம் விஜயாய நம
  14. ஓம் ஜயாய நம
  15. ஓம் அவ்யயாய நம
  16. ஓம் தைத்யாந்தகாய நம
  17. ஓம் பரப்ரகமணே நம
  18. ஓம் அகோராய நம
  19. ஓம் கோரவிக்ரமாய நம
  20. ஓம் ஜ்வாலாமுகாய நம
  21. ஓம் ஜ்வாலாமாலினே நம
  22. ஓம் மகாஜ்வாலாய நம
  23. ஓம் மகாபிரவுவே நம
  24. ஓம் நிடிலாசாய நம
  25. ஓம் சகஸ்ராய சாய நம
  26. ஓம் துர்நிரீ சாய நம
  27. ஓம் ப்ரதாபராய நம
  28. ஓம் மகா தம்ஷ்ட்ராயுதாய நம
  29. ஓம் ப்ராஜ்ஞாய நம
  30. ஓம் கிரண்யக நிசாதனாய நம
  31. ஓம் சண்டகோபினே நம
  32. ஓம் சாராரிக்னாய நம
  33. ஓம் சதார்த்திக்னாய நம
  34. ஓம் சதாசிவாய நம
  35. ஓம் குணபத்ராய நம
  36. ஓம் மகாபத்ராய நம
  37. ஓம் பலபத்ராய நம
  38. ஓம் சூபத்ராய நம
  39. ஓம் கராளாய நம
  40. ஓம் விகராளாய நம
  41. ஓம் விகர்த்ரே நம
  42. ஓம் சர்வகர்த்ருகாய நம
  43. ஓம் பைரவாடம்பராய நம
  44. ஓம் திவ்யாய நம
  45. ஓம் அகம்பாய நம
  46. ஓம் சர்வசத்ருஜிதே நம
  47. ஓம் அமோகாஸ்த்ராய நம
  48. ஓம் சஸ்த்ரதராய நம
  49. ஓம் கவ்யகூடாய நம
  50. ஓம் சீரேச்வராய நம
  51. ஓம் சகஸ்ரபாகவே நம
  52. ஓம் வஜ்ரநகாய நம
  53. ஓம் ஜனார்த்தனாய நம
  54. ஓம் அனந்தாய நம
  55. ஓம் பகவதே நம
  56. ஓம் ஸ்தூலாய நம
  57. ஓம் அகம்யாய நம
  58. ஓம் பராவராய நம
  59. ஓம் சர்வமந்த்ரைக ரூபாய நம
  60. ஓம் சர்வயந்த்ர விதாரணாய நம
  61. ஓம் அவ்யயாய நம
  62. ஓம் பரமானந்தாய நம
  63. ஓம் காலஜிதே நம
  64. ஓம் சுகவாசனாய நம
  65. ஓம் பக்தாதிவத்சலாய நம
  66. ஓம் அவ்யக்தாய நம
  67. ஓம் சூவ்யக்தாய நம
  68. ஓம் சூலபாய நம
  69. ஓம் சுசயே நம
  70. ஓம் லோகை கநாயகாய நம
  71. ஓம் சர்வாய நம
  72. ஓம் சரணாகதவத்சலாய நம
  73. ஓம் தீராய் நம
  74. ஓம் தராய நம
  75. ஓம் சர்வஜ்ஞாய நம
  76. ஓம் பீமாய நம
  77. ஓம் பீம பராக்ரமாய நம
  78. ஓம் தேவப்ரியாய நம
  79. ஓம் நுதாய நம
  80. ஓம் பூஜ்யாய நம
  81. ஓம் பவக்ருதே நம
  82. ஓம் பரமேச்வராய நம
  83. ஓம் ஸ்ரீவத்சவசே சே நம
  84. ஓம் ஸ்ரீவாசாய நம
  85. ஓம் விபவே நம
  86. ஓம் பிரபுவே நம
  87. ஓம் த்ரிவிக்ரமாய நம
  88. ஓம் த்ரிலோகாத்மனே நம
  89. ஓம் காலாய நம
  90. ஓம் சர்வேச் வரேச்வராய நம
  91. ஓம் விச்வம்பராய நம
  92. ஓம் ஸ்திராபார்யாய நம
  93. ஓம் அச்யுதாய நம
  94. ஓம் புருஷோத்தமாய நம
  95. ஓம் அதோசஜாய நம
  96. ஓம் அசயாய நம
  97. ஓம் சேவ்யாய நம
  98. ஓம் வநமாலினே நம
  99. ஓம் ப்ரகம்பநாய நம
  100. ஓம் குருவே நம
  101. ஓம் லோககுருவே நம
  102. ஓம் ஸ்ரஷ்ட்ரே நம
  103. ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம
  104. ஓம் பராயணாய நம

ஒரு மனிதனின் ஜாதகத்தில் 6 ஆம் இடம் என்பது நோய், கடன், எதிராளி, வழக்கு போன்றவற்றை பற்றி கூறும் ஒரு வீடாகும். இந்த 6 ஆம் இடத்தில் பாதகமான கிரகங்கள் ஏதேனும் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் துதிக்க வேண்டிய “ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்” இது.மந்திரம் புத்தகம்

மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்

ஸ்ரீ ஈஸ்வர உவாச:

  1. வ்ருத்தோத் புல்ல விசா’லாக்ஷம் விபக்ஷ க்ஷய தீக்ஷிதம் நிநாத த்ரஸ்த விச்’வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்
  2. ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீந் யநுக்ரமாத் ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்
  3. ஸர்வேந்த்ரியை ரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா யோ ஜா’நாதி நமாம்யாத்யம் தம்ஹம் ஸர்வதோமுகம்
  4. நரவத் ஸிம்ஹவச்சைவ யஸ்ய ரூபம் மஹாத்மந: மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்
  5. யந்நாம ஸ்மரணாத் பீதா: பூத வேதாள ராக்ஷஸா: ரோகாத்யாஸ்ச ப்ரணச்’யந்தி பீஷணம் தம்நமாம்யஹம்  
  6. ஸர்வோபியம்ஸமார்ச்’ரித்ய ஸகலம் பத்ர மச்னுதே ச்ரியா ச பத்ரயா ஜுஷ்ட: யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்
  7. ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் ச’த்ரு கணாந்விதம் பக்தாநாம் நாச’யேத் யஸ்து ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
  8. நமஸ்காராத்மகம் யஸ்மை விதாய ஆத்ம நிவேதனம் த்யக்தது: கோகிலாந் காமாந் அச்’நந்தம் தம் நமாம்யஹம்
  9. தாஸபூதா: ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந: அதோஹமபி தே தாஸ: இதி மத்வா நமாம்யஹம்
  10. ச’ங்கரேண ஆதராத் ப்ரோக்தம் பதாநாம் தத்வ நிர்ணயம் த்ரிஸந்த்யம் ய:படேத் தஸ்ய ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே
  11. உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை போற்றி ஈஸ்வரர் பாடியதாக கருதப்படுகிறது இந்த ராஜ பத ஸ்தோத்திரம். இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் விளக்கேற்றி கிழக்கு திசையை நோக்கி பார்த்தவாறு 3 முறை படிக்க வேண்டும். இரவு உறங்கும் முன்பும் முகத்தை கழுவிக் கொண்டு, மூன்று முறை படிக்க கடன் பிரச்சனைகள் தீரும். நீண்ட நாள் நோய்கள் தீரும். வழக்குகளில் உங்களுக்கு வெற்றி உண்டாகும்.

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி