அசுவினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்.
ஸ்ரீ சரஸ்வதி தேவி , Kethu
பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்
ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) , சுக்ரன்
கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
முருகப் பெருமான் ,சூர்யன்
ரோகிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு) ,சந்திரன்
மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்),செவ்வாய்
திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்.
ஸ்ரீ சிவபெருமான் , Raghu
புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
ஸ்ரீ ராமர் , குரு
பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ,சனி
ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
ஸ்ரீ ஆதிசேசன் , புதன்
மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்.
ஸ்ரீ சூரிய பகவான் , Kethu
பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்.
ஸ்ரீ ஆண்டாள் தேவி ,சுக்ரன்
உத்தரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்.
ஸ்ரீ மகாலக்மி தேவி, சூர்யன்
அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்.
ஸ்ரீ காயத்திரி தேவி,சந்திரன்
சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்.
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ,செவ்வாய்
சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்.
ஸ்ரீ நரசிம்மமூர்த்தி, Raghu
விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்.
ஸ்ரீ முருகப் பெருமான் ,குரு
அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்.
ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர் ,சனி
கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்.
ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்), புதன்
மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்.
ஸ்ரீ ஆஞ்சனேயர் , Kethu
பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்.
ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) , சுக்ரன்
உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்.
ஸ்ரீ வினாயகப் பெருமான் , சூர்யன்
திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்.
ஸ்ரீ ஹயக்கிரீவர், சந்திரன்
அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்.
ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் , செவ்வாய்
சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்.
ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) , Raghu
பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்.
ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) , குரு
உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்.
ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) , சனி
ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்.
ஸ்ரீ அரங்கநாதன் , புதன்
1. ஜென்ம தாரை- அஸ்வினி மகம் மூலம்
2. சம்பத்து தாரை – பரணி,பூரம்,பூராடம்
3. விபத்து தாரை – கிருத்திகை,உத்திரம்,உத்திராடம்
4. ஷேம தாரை- ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம்
5. பிரத்யக் தாரை- மிருகசிரீஷம்,சித்திரை,அவிட்டம்
6. சாதக தாரை- திருவாதிரை,சுவாதி,சதயம்
7. வதை தாரை- புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி
8. மைத்ர தாரை- பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி
9. அதி மைத்ர தாரை- ஆயில்யம்,கேட்டை,ரேவதி
மகம் நட்சத்திர தாரபலன், ஜெயிக்க வைக்கும் தாரைகள்
மகம் சாதக நட்சத்திரங்கள்; சிக்கலான நட்சத்திரங்கள்; பலம் கொடுக்கும் நட்சத்திரங்கள்
மகம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், அனுஷம்.
மகம் ஜென்ம தாரை நட்சத்திரங்கள்.
அஸ்வினி,மகம்,மூலம்
இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு ஜென்ம நட்சத்திரமாக வேலை செய்யும். சுபகாரியங்கள் அனைத்தும் செய்யலாம். ஆண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது, பெண்களுக்கு வளைகாப்பு செய்யக்கூடாது, மேலும் முடி திருத்துதல், சவரம் செய்தல், எண்ணெய்க் குளியல், நகம் வெட்டுதல், தாம்பத்தியம் போன்றவை கூடாது. மற்றபடி அனைத்து சுப விசேஷங்களும் செய்யலாம்.
மகம் சம்பத்து தாரை நட்சத்திரங்கள்.
பரணி,பூரம்,பூராடம்
சுப தாரை
இந்த மூன்று சுப தாரை நட்சத்திரங்கள், & சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எல்லாவிதமான சுப காரியங்களும் செய்யலாம். தொழில் தொடங்குவது, வியாபாரம் ஆரம்பிப்பது, பணவரவு தொடர்பான விஷயங்கள் போன்ற அனைத்துக்கும் இந்த சம்பத்து என்னும் செல்வ வளத்தை தரக்கூடிய தாரையாகும்.
மகம் விபத்து தாரை நட்சத்திரங்கள் .
கிருத்திகை,உத்திரம் ,உத்திராடம்
அசுப தாரை
இந்த மூன்று சிக்கலான நட்சத்திரங்கள், விபத்து என்னும் கடுமையான பாதிப்புகளைத் தரும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் விபத்தால் ஏற்படும் சேதாரம் போல கடுமையான பாதிப்புகளைத் தரும். பயணம் செய்யக்கூடாது, கடன் வாங்கக் கூடாது, புதிய முயற்சிகள் செய்யக்கூடாது.
மகம் க்ஷேம தாரை நட்சத்திரங்கள் .
ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம்
சுப தாரை
இந்த மூன்று நட்சத்திரங்களும் க்ஷேம தாரை நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் பலமடங்கு ஆதாயத்தைத் தரக்கூடியதாக இருக்கும். வீடு வாங்குதல், வாகனம் வாங்குதல், ஆடை ஆபரணம் வாங்குதல் போன்றவை மேற்கொள்ளலாம்.
மகம் பிரத்தியக்குத் தாரை நட்சத்திரங்கள் .
மிருகசிரீஷம் ,சித்திரை,அவிட்டம்
இந்த மூன்று நட்சத்திரங்களும் பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள். பிரத்தியக்கு என்றால் பிறத்தியாருக்கு நன்மை என்று பொருள். ஆக எந்தவொரு காரியம் செய்தாலும் அது மற்றவருக்கு நன்மையாக இருக்குமே தவிர, உங்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்று அர்த்தம். எனவே, இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது, வியாபார விஷயங்களில் ஈடுபடுவது, தொழில் தொடர்பான விஷயங்களில் ஒப்பந்தங்கள் போடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மகம் சாதக தாரை நட்சத்திரங்கள்.
திருவாதிரை,சுவாதி,சதயம்
சுப தாரை
இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் உங்களுக்கு மன மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். வேலைக்கு முயற்சி செய்வது, பதவி உயர்வு பெற்று பணியில் சேர்வது, இடமாற்றம் தொடர்பான விஷயங்களை மேற்கொள்வது, தொழில் வியாபாரம் போன்றவற்றைத் தொடங்குவது, அல்லது அதன் வளர்ச்சிக்காக கடன் வாங்குவது போன்றவை உங்களுக்கு லாபம் தரக் கூடியதாக இருக்கும்.
மகம் வதை தாரை நட்சத்திரங்கள்.
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி
அசுப தாரை
இந்த மூன்று நட்சத்திரங்களும் வதை தாரை நட்சத்திரங்களாகும். வதை என்றால் மிகக் கடுமையான துன்பங்களை அனுபவிப்பது என்று பொருள். எனவே, இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எந்த ஒரு சுப காரியமும் செய்யாமல் இருப்பது சிறப்பு. மேலும் தொலை தூர பிராயணங்கள், வெளியூர், வெளிநாட்டு பிராயணங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.
மகம் மைத்ர தாரை நட்சத்திரங்கள்
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி
சுப தாரை
இந்த மூன்று நட்சத்திரங்களும் மைத்ரம் என்னும் நன்மைகள் தரக்கூடிய நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு விஷயமும் உங்களுக்கு நன்மை தரக்கூடியாத இருக்கும். ஆதாயம் தரக்கூடிய காரியங்களைச் செய்யலாம். தொழில் மற்றும் வியாபார நிமித்தமாக பயணங்களை மேற்கொள்ளலாம். அயல்நாடு தொடர்பு உடைய தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் மேற்கொள்ளலாம்.
மகம் அதி மைத்ர தரை நட்சத்திரங்கள்
ஆயில்யம்,கேட்டை ,ரேவதி
சுப தாரை
இந்த மூன்று நட்சத்திரங்களும் அதிமைத்ரம் எனும் அதிக நன்மைகளைத் தரும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் உங்களுக்கு அதிகப்படியான நன்மைகளைத் தரக் கூடியதாக இருக்கும். அயல்நாட்டுப் பயணங்கள், அயல்நாடுகளில் வேலைக்கு முயற்சி செய்வது, வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அந்த நாட்டுக் குடியுரிமை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது, ஆன்மிகப் பெரியோர்களைச் சந்திப்பது, ஆலய தரிசனங்கள் மேற்கொள்வது என அனைத்தும் உங்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்.
ஜென்ம நட்சத்திரம்
முதலில் ஒவ்வொரு வரும் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜென்ம நட்சத்திரம் தினத்தன்று ஒருவர் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.
ஒருவரது ஜென்ம நட்சத்திர தினத்தன்று திருமணம், சீமந்தம், காது குத்துதல், முடி இறக்குதல், எண்ணை குளியல், மருந்து சாப்பிடுவது, அறுவை சிகிச்சை செய்தல், தாம்பத்திய உறவு போன்றவற்றை வைத்துக் கொள்ளக்கூடாது.
அதற்கு பதில் இதர சுபகாரியங்கள் செய்ய வேண்டும். அதாவது குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, அன்னதானம், தானதர்மம் செய்தல், பதவி ஏற்பு, சொத்துக்கள் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம். குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திரதினம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது. தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும். ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது. வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனை பெற முடியும்.
ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும்.
அதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திர திதியின் அதி தெய்வம் எது என்பதை அறிந்து வழிபட்டால் 100-க்கு 100 வெற்றியைப் பெறலாம்.
நமது ஜென்ம நட்சத்திர நாளில் மட்டுமின்றி கடவுள்களுக்குரிய ஜென்ம நட்சத்திர தினங்களிலும் செய்யும் வழிபாடு நம்மை வாழ்வில் உயர்த்தும். சிவபெருமானுக்கு திருவாதிரை, விஷ்ணுவுக்கு திருவோணம், ராமனுக்கு புனர்பூசம், முருகனுக்கு விசாகம் ஜென்ம நட்சத்திரமாகும்.
திருவாதிரை நட்சத்திர நாளில் சிவனை வணங்கி மருத்துவ சிகிச்சையை தொடங்கினால், எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமாகும்.
சதயம் நட்சத்திர நாளில் கால பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் உடல் வலிகள் நீங்கும்.அது போல சுவாதி நட்சத்திர தினத்தன்று திருவாலங்காட்டுக்கு சென்று சிவனை வழிபட்டால் தோஷங்கள் விலகும்.
அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திர நாட்களில் காஞ்சீபுரத்தில் உள்ள சித்ரகுப்தரை வழிபடலாம்.திருவாதிரை, சதயம், சுவாதி நட்சத்திர நாட்களில் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் தடைகள் விலகி, இன்பம் பெருகும்.
வ.எண் நட்சத்திரம் செடி, மரங்கள்
1. அஸ்வினி எட்டிமரம்
2. பரணி நெல்லிமரம்
3. கிருத்திகை அத்திமரம்
4. ரோகினி நாவல்மரம்
5. மிருகசீருஷம் கருங்காலி மரம்
6. திருவாதிரை செங்கருங்காலி மரம்
7. புனர்பூசம் மூங்கில்மரம்
8. பூசம் அரச மரம்
9. ஆயில்யம் புன்னைமரம்
10. மகம் ஆலமரம்
11. பூரம் பலாசம் மரம்
12. உத்திரம் அலரிமரம்
13. அஸ்தம் அத்திமரம்
14. சித்திரை வில்வம்மரம்
15. சுவாதி மருதுமரம்
16. விசாகம் விளாமரம்
17. அனுஷம் மகிழம்பு மரம்
18. கேட்டை பிராய்மரம்
19. மூலம் மராமரம்
20. பூராடம் வஞ்சிமரம்
21. உத்திராடம் பிலாமரம்
22. திருவோணம் எருக்கஞ்செடி
23. அவிட்டம் வன்னிமரம்
24. சதயம் கடம்பு மரம்
25. பூரட்டாதி தேவராமரம்
26. உத்திரட்டாதி வேம்புமரம்
27. ரேவதி இலுப்பைமரம்
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் சாந்தி செய்யும்வ ழிபாட்டு முறையை தற்போது காணலாம்.
அஸ்வினி
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை அச்வினீ தேவர்கள் எனும் இரட்டையர்கள். இவ்விருவரும் ஒரு முகம், வெண்மைநிற தேகம் கொண்டு, அமுதகலசம் தாங்கிய இரு கைகளுடன், குதிரை வாகனத்தின்மீது இருப்பவர்களாக எண்ணித் துதிக்கப்படவேண்டும். சந்தனத்துடன் கருநெய்தல் எனும் நீலோத்பல மலரால் பூஜித்து, குங்குமப்பூவால் தூபமிட்டு, பசும்பாலும் லட்டுகளும் நிவேதித்து, சர்க்கரைப் பொங்கலால் பலிதானம் அளித்துச் செய்வது அஸ்வினி நட்சத்திரத்தின் சாந்திமுறையாகும். இவ்விதம் ஆவாகனம் முதலாக அன்னபலிவரை செய்வித்து, தானம், விப்ரபோஜனம் செய்விப்பதே சாந்தி வேள்வியின் விதிமுறை. இவ்விதம் மற்ற நட்சத்திரங்களுக்குரிய பொருட்களால், உரிய மந்திரங்களால் செய்யப்படுவதே நட்சத்திர சாந்தியாகும். அவற்றைப்பற்றி சுருங்கக் காண்போம்.
பரணி
பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை எமதர்மர். இவரை ஒருமுகம், இருகை, நீலநிற தேகம், பயங்கரமான உருவம் உடையவராக, இரு கைகளில் பாசக்கயிறையும் தர்மதண்டத்தையும் ஏந்தியவராக, எருமை வாகனத்தின்மீது அமர்ந்துள்ளவராக, பரணி நட்சத்திர தேவதையாக தியானித்து பூஜித்திடவேண்டும். இவருக்கு, காரகில், சந்தனத்துடன் கருநீலநிற வாசமுள்ள மலர்களும், கருங்குங்குலிய தூபமும், சர்க்கரைப்பொங்கல், வெல்ல அப்பம் நிவேதனமும், நெய், தேன்கலந்த எள் ஹோமத்திரவியமும், த்ரயம்பக மந்திரமும், எள் அன்னத்தால் பலி அளித்தலும் என சாந்தி செய்யவேண்டும்.
கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரத்தின் அதிதேவதையான ஸ்ரீ அக்னிதேவரை, இருமுகமும், நாற்கரமும், நான்கு கொம்பும் உடையவராய் ஸ்ருக், ஸ்வரும், அபயம், வரதம் ஆகியவற்றை நாற்கரங்களில் ஏந்தியவராக- ஆட்டு வாகனத்தின்மீதுஅமர்ந்திருப்பவராக தியானித்து பூஜித்திடவேண்டும். சிவப்பு சந்தனத்துடன் மல்லிகைப்பூவும், நெய்யின் தூபமும், நெய், எள் ஹோமத்திரவியமும், உளுந்துசாதம் நைவேத்யமும், பாயச அன்ன உளுந்து சாத பலியும் என சாந்தி செய்யவேண்டும்.
ரோகிணி
ரோகிணி நட்சத்திர தேவதையான பிரஜாபதியை, நான்முகமும், நாற்கரமும், வெண்ணிறமும் உள்ளவராய்- அட்சமாலை, கமண்டலம், அபயம், வரதம் உள்ளவராய் தியானித்து பூஜிக்கவேண்டும். தாமரைமலர், சரளமரத்தூளின் தூபமும், நெய், தானிய வகை ஹோமத்திரவியமும், பாலன்னம், சுத்தன்னம் நிவேதனமும், பாயசம், சர்க்கரைப் பொங்கல் அன்னத்தால் பலியும் செய்தல்வேண்டும்.
மிருகசீரிடம்
மிருகசீரிட நட்சத்திரத்தின் தேவதையான சோமதேவர் (சந்திரன்), தனது இரு கைகளில் வரதமும் தண்டமும் ஏந்தியவராய், வெண்மை நிறத்தவராய், பத்து குதிரைகளைப் பூட்டிய தேரின் மீதுள்ளவராய் தியானித்து பூஜிக்கத்தக்கவர். பூஜைப் பொருட்கள்- குமுதம் (அல்லி), உத்பலம் (கருநெய்தல்) மலர்கள்; தசாங்க தூபம்; பாயசம், அதிரசம் நைவேத்யம்; பயறு, எள், பஞ்ச கவ்யம், தேன் ஹோமத் திரவியங்கள்; பயறு, எள்கலந்த அன்னத்தால் பலிதானம்.
திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தின் அதிதேவதை ஸ்ரீ ருத்ரன் ஆவார். இவரை ஒருமுகமும் மூன்று கண்களும், வெண்ணிற மேனியும் கொண்டவராய்- வெண்ணிற மலர்மாலை சூடியவராய்- தனது நான்கு கைகளிலும் சூலம், கத்தி, அபயம், வரதம் ஏந்தியுள்ளவராய், வெள்ளைநிற எருதின்மீது அமர்ந்திருப்பவராக தியானித்து பூஜித்திடவேண்டும். நறுமணமுள்ள செந்நிறமலர்களுடன், பொன்னிற ஊமத்தம்பூ, மஞ்சள்நிற சரக்கொன்றை மலர், புலிநகக் கொன்றை, வில்வமலர் ஆகிய சிறப்பு மலர்களுடன், அகரு தூபம்; நெய், வெல்லம், பயற்றுப் பாயசம், தேன் நைவேத்யம்; நம சம்பவே எனும் வேதமந்திர ஜபம்; தேன், நெய் ஹோமத்திரவியம்; சர்க்கரைபொங்கல், பாயசான்னம் பலிதானம்.
புனர்பூசம்
புனர்பூச நட்சத்திர தேவதை, தேவமாதாவாகிய அதிதிதேவி ஆவாள். தேவியை மஞ்சள் நிறத்தவளாகவும்; ஸ்ருக், ஸ்வரும் எனும் ஹோம சாதனத்தையும், தர்ப்பை அல்லதுஅட்சமாலை, கமண்டலத்தையும் தன் இருகைகளில் ஏந்தியவளாகவும்; நன்மை அளிப்பவளுமாக தியானித்து பூஜித்தல் முறை. மல்லிகைமலர்; மலயஜத்ரவ்ய தூபம்; மஞ்சள், குங்குமப்பூ கலந்த சந்தனச் சாந்து, மிளகு சீரக நெய்சாதம் நிவேதனம்; அதிதிர் த்யௌர் என்ற வேதமந்திரத்தால் ஜபம்; ஹோமம்; நெய் கலந்த அரிசி ஹோமத்திரவியம்; மஞ்சள், சந்தனத்துடன் கூடிய அன்னத்தால் பலிதானம்.
பூசம்
பூச நட்சத்திர தேவதை வியாழ குருபகவானாகிய பிருஹஸ்பதி ஆவார். இவரை மனிதஉருவத்தில், சர்வாபரணங்களையும் அணிந்துள்ளவராய்- யோகதண்டம், கமண்டலம் அல்லது அபயம், வரத கைமுத்திரையுடன் விளங்குபவராய்- தேவர்களின் மந்திரியாகவும், குருவாகவும் விளங்குபவராக எண்ணி பூஜித்திடவேண்டும். பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ கலந்த சந்தனம், மல்லிகைப்பூ, வெண்தாமரை மலர்கள்; வெண்குங்குலியத்தால் தூபம்; தாமரைநூல் தீபம்; தேன், சர்க்கரை கலந்த பொடித்த அரிசிக்கஞ்சி; சமித்து; நெய், அரிசி பாயசம் ஹோமத்திரயவம்; சந்தனம், மலர்களுடன் நெய்சாத பலிதானம்.
ஆயில்யம்
ஆயில்ய நட்சத்திர தேவதை பாம்பரசரான நாகதேவர் ஆவார். இவரை அகன்ற படமெடுத்த பாம்புத்தலையுடன் கூடியவரும், சிவந்தமேனியும் மூன்று கண் கொண்டவரும், இரு கைகளில் கத்தி, கேடயப் பலகை எந்தியவரும், மஞ்சள்நிற ஆடை உடுத்தியவருமாக தியானித்து, பாம்புகளால் சூழ்ந்தவராகப் பூஜித்திடவேண்டும். காரகில் சந்தனம், நீலநிற அதஸீபுஷ்பம், தாழம்பூ,
அகத்தியப்பூ இவற்றுடன், நெய், குங்குலியம் கலந்த தூபம்; நெய்யரிசிக்கஞ்சி, வெல்லநெய் அப்பம் நைவேத்யம்; மதுவாதா எனும் மந்திரஜபம்; நெய், தயிர் கலந்த எள் அன்னத்தால் ஹோமம்; நாகதேவருக்கு, நாகங்களுக்கு நெய், வெல்லம், தயிர் கலந்த சாதத்தால் பலிதானம்.
மகம்
மக நட்சத்திர தேவதை பித்ருக்கள் ஆவர். இவர்களை ஒருமுகமும், இரு கரமும், அன்ன பிண்டத்தை (இறந்தோர்க்கு அளிக்கப்பட்ட உணவு உருண்டை) வலது கையில் வைத்திருப்பவர்களாகவும், மெலிந்து, எலும்பும் தோலுமாக உள்ள மனித உடல் கொண்டவர்களாகவும், புகை போன்ற கருநிறத்தவர்களாகவும் மிகவும் புனிதர்களாய் விளங்குபவர்களாகவும், நமக்கு நன்மை செய்பவர்களாகவும் எண்ணி பூஜித்திட வேண்டும். சந்தனம், செண்பகப்பூ; குங்குலியப் பொடித் தூபம்; நெய்விளக்கு; நெய், வெல்ல அப்பம் நைவேத்யம்; பிதும்நஸ்தோஷம் எனும் மந்திரஜபம்; நெய், தேன் கலந்த எள்; பச்சரிசி, ஆலமரத்துளிர், ஹோமத்திரவியங்கள்; கருப்பு எள் கலந்த அன்னத்தால் பலிதானம்.
பூரம்
பூர நட்சத்திர தேவதையான அர்யமா என்பவரை. ஒருமுகமும், இருகையும், புகைபோன்ற கருநிற தேகமும் கொண்டவராய் சக்தி ஆயுதத்தை கையில் ஏந்தி தேரின்மீது இருப்பவராக எண்ணிப் பூஜித்தல் வேண்டும். சந்தனம், மாலதி மல்லிகைப்பூ, பொரசம்பூ; வில்வக்காய் மரத்தூள் தூபம்; நெய்சாதம், அதிரசம், லட்டு, நிவேதனம்; அர்யமணம்னு தேவம் எனும் மந்திரத்தால் ஜபஹோமம்; நெய்கலந்த தினையரசி ஹோமத்திரவியம்; சந்தன மலர்களுடன் அர்யமா எனும் சூரியனுக்கு, சர்க்கரைப் பொங்கலால் பலிதானம்.
உத்திரம்
உத்திர நட்சத்திர தேவதை பகதேவர். இருகைகளில் சங்கு, சக்ரம் ஏந்தி, சிறந்த தேர்மீதிருப்பவராகவும். அடியவர்களின் விருப்பப் பயனைத் தருபவராகவும் தியானித்து வழிபடத் தக்கவர். இவரை சந்தனத்துடன் கூடிய மகிழம்பூ, வெள்ளை நிற அலரிப்பூவால் பூஜித்தும்; வில்வப்பழம், குங்குலியம், இவற்றில் நெய்கலந்து தூபமிட்டும்; எள்சாதம் நிவேதனம் செய்தும்; ஆஸத்யே நேதி மந்திரத்தை ஜபித்தும்; எள், கடுகு, நெல் வகைகளை ஹோமத்திரவியமாய் ஆஹுதி செய்தும், சம்பா அரிசி அன்னத்தை பலியாக அளித்தும் சாந்தி செய்யப்படவேண்டும்.
அஸ்தம்
அஸ்த நட்சத்திர தேவதையாகிய சவிதா என்பவரை (சூரியனை), ஏழு குதிரைகளையுடைய தேரில் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பவராக- சாயாதேவியின் கணவராக தியானித்து பூஜித்திடவேண்டும். சந்தனத்துடன், தாமரை, சிவப்பு நிற அலரிப்பூவால் அர்ச்சித்து; சந்தனம், குங்குலியத்தால் தூபமிட்டு; நெய் பாயசம், வெல்ல அப்பம் நிவேதித்து; உதுத்யம் ஜாதவேதஸம் எனும் மந்திரத்தை ஜபித்து; தயிர், நெய், அரிசிகளால் ஹோமத்தில் ஆஹுதிகளை அளித்து; சந்தனப்பூ, இலுப்பைப்பூ, அறுகு, எள், நெய், வெல்லத்துடன் கூடிய (கேசரி) அன்னபலி அளித்து சாந்தி செய்யவேண்டும்.
சித்திரை
சித்திரை நட்சத்திர தேவதையான த்வஷ்டா என்பவரை, கிரீடம்சூடி தேரில் அமர்ந்தவராக- சங்கு, சக்கரம் ஏந்திய இருகைகளுடன் கூடியவராக எண்ணி பூஜிக்கவும். இவரை சந்தனத்துடன் கூடிய பலநிற மலர்களாலும், செம்பருத்திப் பூவாலும், வில்வத்தாலும் பூஜித்து; தசாங்கப்பொடியால் தூபமிட்டு; வண்ணக்கலவை சாதம், மோதகம் நிவேதித்து; சித்ரம் தேவானாம் என்ற மந்திர ஜபத்துடன், நீர்கலந்த நெய்கலவை சாதத்தால் ஆஹுதி அளித்து, நெய்கலந்த பயறு அன்னத்தை பலிதானம் செய்யவேண்டும்.
சுவாதி
இந்த நட்சத்திர தேவதை வாயு தேவர். இவரை மான்மீது அமர்ந்தவரும், புகை போன்ற நிறத்தவரும், இரு கைகளில் கத்தி, கேடயம் ஏந்தியவருமாக எண்ணிப் பூஜித்திட வேண்டும். இவரை காரகில் சந்தனத்துடன், மரிக்கொழுந்தால் பூஜித்து, வெள்ளை அகில் மரத்தூளால் தூபமளித்து, தயிரன்னத்தை நிவேதித்து, “ஸனப்பிதா’ எனும் மந்திரத்தை ஜெபித்து, நெய் கலந்த, யவை தானியம் மற்றும் பாயசன்னத்தால் ஹோமத்தில் ஆஹுதியும், சந்தமன மலருடன் கூடிய பாயசன்னத்தால் பலியும் அளித்து, சுவாதி நட்சத்திர சாந்தியை முறைப்படி செய்யவேண்டும்.
விசாகம்
இந்த நட்சத்திர தேவதைகளான இந்திரன், அக்னி இருவரும் மங்களத்தை அளிப்பவர்களாய், அபய, வரத முத்திரைகளுடன் கூடிய இருகரங்களை உடையவர் களாய் தியானித்துப் பூஜிக்கத் தக்கவர்கள். இவ்விருவருக்கும் சந்தனத்துடன் கூடிய தாமரைப்பூ, பந்தூக மலர்களால் பூஜையும், தேவதாரு மரத்தூளால் தூபமும், நெய் கலந்த பாயசத்தால் நிவேதனத்தையும் செய்து, “சம்ந இந்த்ராக்னி’ எனும் மந்திரத்தால் ஜெபமும், நெய் பாலன்ன ஆஹுதியும், கந்தபுஷ்பத்துடன் பால்சாத பலியும் தந்து சாந்தி செய்ய வேண்டும்.
அனுஷம்
அனூராதா என்னும் அனுஷ நட்சத்திர தேவதையான மித்ரதேவரை, செந்நிறத் தவராய், இரு கைகளில் திரிசூலம், அங்குசம் ஏந்தியவராய், பத்மாசனத்தில் அமர்ந்துள்ளவராக தியானித்துப் பூஜிக்கவும். இவரை வெண்தாமரை மலரால் அர்ச்சித்து, சந்தனத்தால் தூபமிட்டு, நெய்பாயசத்தை நிவேதித்து, “மித்ரஸ்ய சர்ஷணீத்ருத’ எனும் மந்திரத்தால் ஜெபம், ஹோமம் செய்து, சூர்ணகந்தத்தால் சாந்தி செய்யப்பட வேண்டும்.
கேட்டை
ஜ்யேஷ்டா எனப்படும் கேட்டை நட்சத்திர தேவதையான இந்திரனை, ஐராவதமெனும் யானைமீது அமர்ந்தவரும், வஜ்ரம், பாசம், வரதம், அபயம் கொண்ட நாற்கரத்தவருமாக எண்ணிப் பூஜித்திடவும். இவரை சந்தனத் துடன் தாமரை மற்றும் படோலீ (பாதிரி) பூக்களால் பூஜித்து, பச்சைக் கற்பூரத்துடன் அகில் மரத்தூளால் தூபமிட்டு, சித்ரான்னம் நிவேதித்து “இந்த்ரம் வோ’ எனும் மந்திரத்தால் ஜெபமும் ஹோமமும் செய்து, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வேர் இவற்றின் ஆஹுதியையும், சந்தன மலர்களுடன் கூடிய தயிரன்னத்தால் பலியையும் தந்து சாந்தி செய்யவேண்டும்.
மூலம்
மூல நட்சத்திர தேவதையான நிரு ருதிதேவரை, உக்ரமான வாயுடைய ஒரு முகத்த வரும், கருநீல நிறத்தவரும், ராட்சச குலத்தின் தலைவரும், மேல்நோக்கிய பரட்டை முடியை உடையவரும், சிவந்து உக்ரமான வட்ட விழிகளைக் கொண்டவருமாக எண்ணிப் பூஜிக்கவும். இவரை காரகில் (மற்றும் ஆட்டுக்கொம்புப் பொடி) தூபமும், காரகில் சந்தனத்துடன் கூடிய நீலநிற எருக்கம்பூ, சாமந்திப்பூ, சிவப்புநிற அசோகப்பூ, கருநெய்தல் பூ இவற்றால் பூஜித்து, உளுந்து சாதம், (மீன், மாமிசம், கள் முதலியவற்றை) நிவேதித்து “மோஷுண: பராபரா’ என்ற மந்திரத்தால் ஜெபஹோமம் செய்து, நிருருதிக்கு பலி தந்து சாந்தி செய்ய வேண்டும்.
பூராடம்
பூர்வாஷாடா எனப்படும் பூராட நட்சத்திர தேவதையாகிய ஆபதேவர்களை (ஆப: நீர்) கடலின்மீதில் அலைவடிவாய் இருந்து அனைத்து ஜீவர்களைக் காப்பவர்களாயும், தினமும் மங்களம் அளிப்போராகவும் எண்ணிப் பூஜிக்கவும். இவர்களை கல்ஹாரமெனும் கருநெய்தல்பூவால் அர்ச்சித்து, மனோசிலை தாதுப்பொடியால் தூபமிட்டு, தயிர்கலந்த அரிசிக் கஞ்சியை நிவேதித்து, “ஆபோஹிஷ்டா’ எனும் மந்திரத்தால் ஜெபஹோமம் செய்து, செந்நெல் தானியத் தால் ஆஹுதியும், சீரகச்சாதம், பாயசன்னம் பலி தந்தும் சாந்தி செய்யவேண்டும்.
உத்திராடம்
உத்தராஷாடா எனப்படும் உத்திர நட்சத்திரத்தின் தேவதை விச்வே தேவர்கள். அழகு, வளம், புகழ், அறிவு அளித்திடும் விச்வே தேவர்களை எல்லா பாவங்களையும் போக்குவதற்காக எண்ணி வணங்குவோம். இவர்களை ஐந்து மலர்களாலும், அரக்குடன் கூடிய அகருதூபத்தாலும், ஐவகை பட்சண நிவேதனத்துடன் பூஜித்து, “விச்வே தேவாஸ ஆகதே’ எனும் மந்திர ஜெபமும், நெய்யுடன் கூடிய சல்ல துண்டுகளால் திரவியாஹுதியும், பாயசன்னத்தால் பலிதானமும் தந்து சாந்தி செய்யவேண்டும்.
அபிஜித்
அபிஜித் நட்சத்திரத்தின் தேவதை, திரு மாலின் நாபிக்கமலத்திலிருந்து வெளிப்பட்டு அமர்ந்து வேதமோதும் பிரம்மதேவர். இவரை நான்கு முகமும் நான்கு கரமும் கொண்டு பத்மாசனத்தில் இருப்பவராக- தீர்த்த கண்டிகை, அட்சமாலை, வேதப் புத்தகம், தாமரைப்பூ இவற்றைத் தனது நாற்கரங்களில் ஏந்தியவராக தியானித்து முறைப்படி பூஜித்திட வேண்டும். இந்த நட்சத்திரத்தின் சாந்தியை தனியாகச் செய்யாமல், அடுத்ததான திருமாலின் திருவோண நட்சத் திரத்துடன் சேர்த்துப்பூஜித்து, ஹோமதானாதிகளுடன் சாந்தி செய்துகொள்ள வேண்டும்.
திருவோணம்
திருவோணம் எனப்படுகிற ச்ரோணா நட்சத்திரத்தின் தேவதையான விஷ்ணுவானவர், சாந்தமான தோற்றமும், தாமரைப்பூ இதழ் போன்ற அழகிய இருபெரும் கண்களும், சங்கு, சக்ரம், அபயம், வரதம் ஏந்திய நான்கு கைகளும், நீலநிறத் திருமேனியும் கொண்டு, கருட வாகனத்தில் இருப்பவராக தியானித் துப் பூஜிக்கத் தக்கவர். இவரை சந்தனத்துடன் கூடிய தாமரை மற்றும் ஜாதீபுஷ்பத்தாலும், தசாங்க திரவியப்பொடி தூபத்தாலும், நெய், பால், சர்க்கரைக்கஞ்சி அல்லது நெய் பாயசன்ன நிவேதனத்துடன் “அதோ தேவா’ எனும் மந்திரத்தினால் ஜெபமும், சிவப்பு அரிசியால் திரவியாஹுதியும், முடிவில் சந்தமன மலருடன் விஷ்ணுவின் பொருட்டு அன்னபலி தானமும் செய்து சாந்தி செய்வது முறையாம்.
அவிட்டம்
ச்ரவிஷ்டா எனும் அவிட்ட நட்சத்திர தேவதைகளான அஷ்டவஸுக்கள் எனும் எண்மரையும், மகுடம் தரித்து தேரின்மீது இருப்பவர்களாகவும், சங்கு, சக்கர உருவில் கைரேகை உள்ளவர்களாயும் எண்ணிப் பூஜித்திட வேண்டும். இவர்கள் எண்மரையும் நூறு இதழ் உள்ள தாமரைப்பூவால் பூஜையும், குங்குலியத்தால் தூபமும், பாயசம், நெய்போளி பலகாரம் இவற்றால் நிவேதனமும், அரசு, வில்வம், அத்தி ஆகிய சமித்துக் களால் ஆஹுதியும், “த்ராயந்தாமிஹ தேவா’ எனும் மந்திரஜெப ஹோமத்துடன் நெய் கலந்த பயிறு சாத பலிதானமும் தந்து சாந்தி செய்ய வேண்டும்.
சதயம்
சதபிஷக் எனப்படும் சதய நட்சத்திர தேவதையான வருணதேவரை, தன் இரு கைகளில் அமுதகலசம், பாசம் இவற்றை ஏந்தியவராய், வெண்ணிறத்தவராய், தேவர்களால் வணங்கப்படுவராக எண்ணிப் பூஜித்தல் முறை. இவரை தாமரை முதலிய நீர்ப்பூவகையால் அர்ச்சித்து, தசாங்கத்தால் தூபமும், நெய்பாயசம் மற்றும் அரிசிக் கஞ்சி நிவேதனமும், “இமம் மே வருண’ எனும் மந்திர ஜெபத்துடன், நீரில் தோன்றிக் கிடைக்கும் பொருள்களால் ஆஹுதியும் செய்து, பாயசன்னத்தால் பலியும் தந்து சாந்தியை முறைப்படி செய்யவேண்டும்.
பூரட்டாதி
பூர்வப்ரோஷ்டபதா எனப்படும் பூரட்டாதி நட்சத்திர தேவதை அஜர். (மஹாப் பிரளய காலத்து பைரவர்). இவரை ஒரு கால் மட்டும் உடையவராகவும், தோன்றாத் தன்மையுடன் நித்யமாய் விளங்குபவரும், அனைத்து தேவர்களாலும் வணங்கப் படுபவரும், சம்ஹார காலத்திய ருத்ரமூர்த்தி யுமாக சிந்தித்துப் பூஜித்திட வேண்டும். இவரை எருக்கம்பூ, பெரம்புப் பூவால் அர்ச்சித்து, மூலிகைப் பொருளால் தூபமிட்டு, நெய், தேன் கலந்த தயிரன்னம் நிவேதித்து, நெய் தோய்த்த பூசணித் துண்டால் ஆஹுதி செய்து, நெய் சாதத்தால் பலிதானம் செய்து சாந்தி செய்யவேண்டும்.
உத்திரட்டாதி
உத்தராபாத்ரா எனப்படும் உத்திரட் டாதி நட்சத்திர தேவதையான அஹிர்புத்னியர் என்பவரை மகுடமணிந்தவராய், சங்கு, சக்கரம் ஏந்தியவராக தியானித்துப் பூஜிக்கவும். இவரை கரஞ்சி (விஷ்ணுகிராந்தி) பத்ரத்தால் அர்ச்சித்து, நெய் தூபமிட்டு, சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து, நெய்யுடன் உளுந்து, பயறு தானியங்களால் ஆஹுதி செய்து, நெய்வெல்ல சாதம் பலிதானம் செய்து சாந்தி செய்திடவேண்டும்.
ரேவதி
ரேவதி நட்சத்திரத்தின் தேவதை பூஷா என்பவர். இவர் ஒரு முகம், இரு கால்களுடன், இரு கைகளில் வரதமும், அபயமும் கொண்டு ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவராக தியானித்துப் பூஜிக்கத்தக்கவர். இவரை மந்தார மலரால் அர்ச்சித்து, செஞ்சந்தனத்துடன் கூடிய குங்குலிய தூபமிட்டு, எள், அரிசி, வெல்லப்பொடியை நிவேதனம் செய்து, நெய்யுடன் கூடிய வாழைப்பழம் அல்லது மாம்பழம் இவற்றால் ஆஹுதியைச் செய்து, பாயசன்னத்தால் பலிதந்து சாந்தி செய்திட வேண்டும்.
- உங்கள் நட்சத்திரத்திற்குரிய கோயில் எது?
- எப்படி செல்ல வேண்டும்?
- அங்கு சென்றால் கிடைக்கும்
- பலன் என்ன! ……………
#அசுவினி:
கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லிகை பிறவிமருந்தீஸ்வரரை வணங்கி கணவன், சிறுவனை உயிர்ப்பித்தாள்.
சிறப்பு: நோய்களுக்கு நிவாரணம் தரும் அசுவினி நட்சத்திர தேவதையும், மருத்துவ தேவதைகளும் இங்கு வழிபடுவதாக ஐதீகம். அசுவினி நட்சத்திர நாளில் இங்கு தன்வந்திரி ஹோமம் செய்தால் ஆரோக்கியம் நிலைக்கும்.
இருப்பிடம்: திருவாரூரிலிருந்து 30 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 6-11, மாலை4- இரவு 8.
போன்: 94438 85316, 04369 222 392
பரணி:
கோயில்: நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்
அம்மன்: சுந்தரநாயகி
தல வரலாறு: இத்தலத்தில் மிருகண்ட மகரிஷி ஒரு யாகம் நடத்தினார். யாகத்தீயில் போட்ட பட்டு, சிவனை சென்று சேர்வது குறித்து சிலருக்கு சந்தேகம் எழுந்தது. கருவறைக்குச் சென்று காணும்படி மகரிஷி கூற, சிவன் மீது பட்டாடையைக் கண்டனர். பரணி என்ற அக்னி இருப்பதாகவும், அதுவே யாகப்பொருட்களை சிவனிடம் சேர்ப்பதாகவும் மகரிஷி விளக்கினார். இதனால் இது பரணித்தலமானது.
சிறப்பு: பரணி நட்சத்திரத்தினர் ஹோமம் நடத்தலாம். கார்த்திகை மாத பரணி மிகவும் சிறப்பு. மேற்கு நோக்கி சுவாமி இருப்பதால் சக்தி அதிகம்.
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து, நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கி.மீ., தூரத்தில் நல்லாடை.
திறக்கும் நேரம்: காலை 8- மதியம்12, மாலை 5- இரவு 8.30.
போன்: 94866 31196, 04364 285 341
#கார்த்திகை:
கோயில்: கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர்
அம்மன்: துங்கபால ஸ்தனாம்பிகை
தல வரலாறு: தேவர்கள், பத்மாசுரனிடம் இருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அப்போது, சிவன் இங்கு நெருப்பு வடிவில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். தவம் கலைந்த அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் பறந்தன. அதிலிருந்து கார்த்திகேயன் (முருகன்) அவதரித்தார். தீப்பொறி பொன்னிறமாக எழுந்ததால் “காஞ்சன நகரம்’ எனப்பட்டது. அதுவே “கஞ்சாநகரம்'(பொன்நகரம்) என்றாகிவிட்டது.
சிறப்பு: கார்த்திகையில் பிறந்தவர்கள் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாளில் தீபமேற்றி வழிபட வாழ்வு வளம் பெறும். கார்த்திகையில் பிறந்த கன்னிப்பெண்கள் அம்மனை வழிபட விரைவில் திருமணயோகம் கைகூடும்.
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் 8 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை10- 11, மாலை4-5
போன்: 94874 43351, 04364 282 853.
#ரோகிணி:
கோயில்: காஞ்சிபுரம் பாண்டவதூதப் பெருமாள் கோயில்
தல வரலாறு: வைசம்பாயனர் ரிஷியிடம், ஜன்மேஜய மகாராஜா, மகாபாரதக் கதை கேட்டார். கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் பற்றிக் கேட்ட போது, மன்னருக்கும் அந்த தரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் உண்டானது. ரிஷியின் வழிகாட்டுதல்படி காஞ்சிபுரத்தில் தவம் செய்து தரிசனம் பெற்றார். அவரே பாண்டவதூதப்பெருமாளாக கோயில் கொண்டிருக்கிறார்.
சிறப்பு: ரோகிணிதேவி, இத்தல பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். ரோகிணி நட்சத்திரத்தினர் புதன், சனிக்கிழமை, அஷ்டமிதிதி, 8ம் தேதிகளில் வழிபடுவது சிறப்பு.
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ.,. ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரிலுள்ள சாலை.
திறக்கும்நேரம்: காலை 7- 11, மாலை 4- இரவு 7.30.
போன்: 044- 2723 1899.
#மிருகசீரிஷம்:
கோயில்: எண்கண் ஆதிநாராயணப் பெருமாள் கோயில்
தல வரலாறு: பெருமாளை நோக்கி தவமிருந்த பிருகுமுனிவர், சிங்க வேட்டைக்கு வந்த சோழனின் ஆரவாரத்தால் தவம் கலைந்து எழுந்தார். கோபத்தில் அவனை சிங்கமுகத்தோடு பிறக்க சாபமிட்டார். விருத்தகாவிரி என்னும் வெற்றாற்றில் நீராடி, எண்கண் பெருமாளை வணங்கி மீண்டும் மனிதமுகத்தைப் பெற்றான்.
சிறப்பு: மிருகசீரிட நட்சத்திரத்தினர், மிருகசீரிட நாளில் இங்கு வந்து வழிபட்டால் வாழ்வில் பிரச்னை நீங்கி சந்தோஷம் கூடும்.
இருப்பிடம்: தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் 50கி.மீ., தூரத்தில் முகூந்தனூர். அங்கிருந்து 1கி.மீ., தூரத்தில் எண்கண்.
திறக்கும்நேரம்: மாலை5- இரவு 7.
போன்: 94433 51528, 04366- 269 965.
#திருவாதிரை:
கோயில்: அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர்கோயில்
அம்மன்: சுந்தரநாயகி அம்மன்
தலவரலாறு: அசுரர்களுக்கு அஞ்சிய தேவர்கள், திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் அடைந்து சிவனருள் பெற்றனர். அபயம் அளித்தவர் என்பதால், சிவனுக்கு “அபயவரதீஸ்வரர்’ என பெயர் வந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ரைவத மகரிஷி, பைரவ மகரிஷி ஆகியோர் அருவநிலையில் இக்கோயில் சிவனை வழிபடுவதாக ஐதீகம்.
சிறப்பு: திருவாதிரை நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் தீர்க்காயுள், தைரியம் கிடைக்கும். அதீவீரராம பாண்டியர் திருப்பணி செய்ததால், இத்தலம் “அதிவீரராமன்பட்டினம்’ என வழங்கியது. தற்போது அதிராம்பட்டினமாகி விட்டது.
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை 70கி.மீ., அங்கிருந்து 12 கி.மீ., தூரத்தில் அதிராம்பட்டினம்.
திறக்கும்நேரம்: காலை 6.30- 12, மாலை4- இரவு 8.30.
போன்: 99440 82313, 94435 86451.
#புனர்பூசம்:
கோயில்: வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தலவரலாறு: பிரம்மாவைப் பிரிந்த சரஸ்வதி பூலோகம் வந்தாள். அவளை சிருங்கேரியில் கண்டு சமாதானப்படுத்தினார். இருவரும் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். அதிதீஸ்வரர் கோயிலில் தங்கிய கலைவாணியைப் பாடும்படி சிவபார்வதி வேண்ட, அவளும் இனிமையாகப் பாடினாள். அதனால் இத்தலம் வாணியம்பாடி என்றானது.
சிறப்பு: கஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, வாணியம்பாடியில் புனர்பூச நட்சத்திர நாளில் விரதமிருந்து தேவர்களுக்குத் தாயாகும் பாக்கியம் பெற்றாள். மேற்கு நோக்கிய இத்தலத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தினர் வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும்.
இருப்பிடம்: வேலூர்- கிருஷ்ணகிரி சாலையில் 67கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி. அங்கிருந்து 3கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை 6.30- 10.30, மாலை 5- இரவு 7.
போன்: 99941 07395, 04174 226 652
#பூசம்:
கோயில்: விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: அபிவிருத்தி நாயகி
தல வரலாறு: காலில் ஏற்பட்ட வாதநோயைப் போக்கும் விதத்தில் சனி, திருத்தல யாத்திரை புறப்பட்டார். விளங்குளத்தில் இருக்கும் அட்சயபுரீஸ்வரரை வழிபட்டபோது நோய் குணமானது. அன்று, பூசம் நட்சத்திரமாக இருந்தது. பித்ருக்களின் அம்சமான காகங்களின் குருவான “பித்ரசாய்’ சித்தர் இங்கு தினமும் வழிபடுகிறார்.
சிறப்பு: இங்கு மந்தா, ஜேஷ்டா ஆகிய தேவியருடன் சனீஸ்வரர் மணக்கோலத்தில் வீற்றிருக் கிறார். பூச நட்சத்திரத்தினர் பூசம் மற்றும் திரிதியை நாளில் இவருக்கு அபிஷேகம் செய்து எட்டுமுறை சுற்றி வர நோய் நீங்கும். திருமணயோகம் கைகூடும்.
இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 30கி.மீ., தூரத்தில் விளநகர் விலக்கு. அங்கிருந்து தெற்கே 2கி.மீ, தூரத்தில் கோயில்.
திறக்கும்நேரம்: மாலை4- இரவு7.
போன்: 97507 84944, 96266 85051.
#ஆயில்யம்:
கோயில்: திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்
அம்மன்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி
தல வரலாறு: துர்வாசரின் சாபத்தால் நண்டு பிறப்பெடுத்த கந்தர்வன், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான். கற்கடகத்திற்கு (நண்டுக்கு) அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி “கற்கடேஸ்வரர்’ என பெயர் பெற்றார். பிரகஸ்பதியின் வழிகாட்டுதலின்படி, இந்திரன் இங்குள்ள சிவனை1008 மலர்களால் வழிபட்டு ஆணவம் நீங்கப்பெற்றான். இந்திரன் திருந்திய தலம் என்பதால் “திருந்துதேவன்குடி’ என்ற பெயர் வந்தது. “நண்டுக்கோயில்’ என்றால் தான் தெரியும்.
சிறப்பு:ஆயில்யம், தேய்பிறை அஷ்டமிநாளில் கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் சாத்தி வழிபட நன்மை பெருகும்.
இருப்பிடம்: கும்பகோணம்- சூரியனார்கோயில் சாலையில் 11கி.மீ., தூரத்தில் திருவிசநல்லூர். அங்கிருந்து திருந்துதேவன்குடி 2கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை9- மதியம் 1.30, மாலை 4- இரவு7.
போன்: 99940 15871, 0435- 200 0240
#மகம்:
கோயில்: ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயில்
அம்மன்: மாணிக்கவல்லி, மரகதவல்லி
தல வரலாறு: மக நட்சத்திரத்தில் அவதரித்த பரத்வாஜர் தவமேடை அமைத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்ட தலம் ஒடுக்கம் தவசிமேடை. கோயிலுக்கு வரும் அடியவர்களின் பாதம் தன்மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜரே இங்கு பீடமாக இருக்கிறார்.
சிறப்பு: மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாதசிவராத்திரி நாளில் மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட வாழ்வு வளம் பெறும். இங்கு மாணிக்கவல்லி, மரகதவல்லி அம்மன் சந்நிதிகள் உள்ளன. சிவராத்திரியை ஒட்டி 30 நாட்கள் காலை நேரத்தில் மூலவர் மீது சூரியஒளி விழுவது சிறப்பு.
இருப்பிடம்: திண்டுக்கல்- நத்தம் சாலையில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு. அங்கிருந்து 2கி.மீ. தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை6- மாலை6.
போன்: 95782 11659, 93624 05382.
#பூரம்:
கோயில்: திருவரங்குளம் ஹரிதீர்த்தேஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: புத்திரப் பேறு வாய்க்காத சோழ மன்னன் கல்மாஷ பாதன் அகத்தியரின் உதவியை நாடினான். அவரின் வழிகாட்டுதலால், திருவரங்குளம் சிவனை வணங்கப் புறப்பட்டான். அந்தக் கோயில் புதைந்து போனது அறிந்து பூமியைத் தோண்டினான். லிங்கத்தில் கடப்பாறை பட்டு ரத்தம் பீறிட்டது. தோஷம் நேரும் என வருந்தி உயிர் விடத் துணிந்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து குறை தீர்த்தார். இந்த நிகழ்வு பூரம் நட்சத்திரத்தில் நடந்தது.
சிறப்பு: பூர நட்சத்திர லோகத்தில் சிவ,நாக, ஞானபிரம்ம, இந்திர, ஸ்ரீ, ஸ்கந்த, குரு தீர்த்தங்கள் உள்ளன. திருவரங்குளத்திலும் இவை ஏழும் உள்ளன. பூர நட்சத்திரத்தினர் தங்கள் பிறந்தநாளில் இங்கு வழிபட்டால் வாழ்வில் மேன்மை பெறுவர்.
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் 7 கி.மீ.
திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை5- இரவு7.30
போன்: 98651 56430, 99652 11768
#உத்திரம்:
கோயில்: இடையாற்றுமங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில்
அம்மன்: மங்களாம்பிகை
தல வரலாறு: உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மாங்கல்ய மகரிஷி. இவர் அகத்தியர், வசிஷ்டர் ஆகியவர்களின் திருமணத்தில் மாங்கல்ய தாரண பூஜை நடத்தியவர். யாரும் அறியாமல் சூட்சும வடிவில் பூலோகத்தில் சிவனை வணங்கி தன் சக்தியை அதிகரித்துக் கொண்டார். சிவன் இவருக்கு அருள்புரிந்த தலமே இடையாற்று மங்கலம்.
சிறப்பு: மணவாழ்வுக்காக காத்திருப்பவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு. திருமணம் நிச்சயித்தபின், மாங்கல்ய மகரிஷிக்கு வெற்றிலைபாக்குடன் கல்யாண பத்திரிகை வைத்து வேண்டிக் கொள்கின்றனர். உத்திர நட்சத்திரத்தினர் வழிபட்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.
இருப்பிடம்: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 22கி.மீ., தூரத்தில் லால்குடி. அங்கிருந்து இடையாற்று மங்கலம் 5 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 8- மதியம்12, மாலை6- இரவு 8.
போன்: 98439 51363, 0431- 254 4070.
#அஸ்தம்:
கோயில்: கோமல் கிருபா கூபாரேஸ்வரர் கோயில்
அம்மன்: அன்னபூரணி
தல வரலாறு: சிவனின் கண்களைப் பார்வதி கைகளால் பொத்தினாள். உலகமே இருளில் மூழ்கியது. அப்போது, சிவனும் தன் கையில் இருந்த ஹஸ்தாவர்ண ஜோதியில் மறைந்தார். சிவனைத் தேடி, அம்பாள் பசுவடிவில் பூலோகம் புறப்பட்டாள். அஸ்த நட்சத்திரத்தன்று சிவனை ஜோதிவடிவில் தரிசித்து ஐக்கியமானாள். பக்தர்கள் மீது கருணை(கிருபை) கொண்டவர் என்பதால் “கிருபா கூபாரேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.
சிறப்பு: அஸ்த நட்சத்திரத்தினர் திங்கள், புதன்கிழமையில் வழிபடுவது நல்லது. அன்னபூரணி அம்பிகை பசுவாக இங்கு வந்ததால் பசு,கன்று தானம் அளிப்பது சிறப்பு.
இருப்பிடம்: கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குப் பிரியும் இடத்தில் இருந்து 8கி.மீ., தூரத்தில் கோமல்.
திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை 5.30- இரவு 7.30.
போன்: 95002 84866
#சித்திரை:
கோயில்: குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள்
தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
தல வரலாறு: தேவகுரு பிரகஸ்பதியின் மகன் கசனை, அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி திருமணம் செய்ய விரும்பினாள். கசனை அசுரலோகத்திலேயே கட்டாயப்படுத்தி இருக்கச் செய்தாள். மகனைக் காணாத பிரகஸ்பதி விஷ்ணுவை நோக்கி தவமிருந்தார். விஷ்ணு சக்கரத்தாழ்வார் மூலம் கசனை மீட்டார். இதையடுத்து சக்கரத்தாழ்வாரும், தேவ குருவும் ஒரே இடத்தில் அமர்ந்தனர். அதுவே குருவித்துறை தலம்.
சிறப்பு: பிரகஸ்பதிக்கு அருள்புரிய விஷ்ணு, சித்திர ரதத்தில், சித்திரை நட்சத்திரத்தன்று எழுந்தருளினார். எனவே, இக்கோயில் சித்திரைக்குரியதானது. வியாழன், பவுர்ணமி, சித்திரை நட்சத்திர நாட்களில் தரிசிப்பது சிறப்பு.
இருப்பிடம்: மதுரையிலிருந்து 23 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 3- 6.
போன்: 94439 61948, 97902 95795.
#சுவாதி:
கோயில்: சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில்
அம்மன்: பூங்குழலி
தல வரலாறு: படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா ஆகியோர் நெல்லிவனத்தில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். சித்தர் தவமிருந்த பகுதியானதால் இப்பகுதி சித்தர்காடு, சித்துக்காடு என அழைக்கப்பட்டது. . நெல்லி மரத்தடியில் இருப்பதால் சிவனுக்கு “தாத்திரீஸ்வரர்’ என்று பெயர். “தாத்திரீ’ என்றால் “நெல்லி.
சிறப்பு: சுவாதி நட்சத்திரத்தினர் இங்கு சிவனை வழிபட்டால் செல்வ வளமிக்க வாழ்வு உண்டாகும். திருமணயோகம் விரைவில் கைகூடும். இங்கு குபேரருக்கு நெல்லிக்காய் ஊறுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து வழிபட்டால் யோகவாழ்வு அமையும்.
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லி- தண்டுரை வழியில் 8 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை8- 10, மாலை 5-7
போன்: 93643 48700, 9382684485.
#விசாகம்:
கோயில்: பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில்
தல வரலாறு: பூவன்பட்டர் என்ற அர்ச்சகரின் கனவில் முருகன் தோன்றி, புதையுண்டு கிடக்கும் சிலையை திருமலையில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பந்தளமன்னர் கோயில் கட்டினார். மண்டபம் எழுப்புவதற்கான கற்களை, சிவகாமி பரதேசி என்ற முருக பக்தை, மலையடிவாரத்திலிருந்து வாழைமட்டை மூலம் இழுத்துச் சென்ற பெருமையுடையது.
சிறப்பு: விசாகம் என்றால் “மேலான ஜோதி’. இந்த நட்சத்திரத்தின் ஒளிக்கிரணங்கள் இம்மலையில் படுவதால் விசாக நட்சத்திரத்தினர் வழிபட்டால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும்.
இருப்பிடம்: மதுரையிலிருந்து செங்கோட்டை 155 கி.மீ., அங்கிருந்து 7கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும்நேரம்: காலை6- மதியம் 1, மாலை 5, இரவு 8.30.
போன்: 04633- 237 131, 237 343.
#அனுஷம்:
கோயில்: திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: உலகநாயகி
தல வரலாறு: ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை ரசித்தாள். இதை அறிந்த முனிவர் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமனிடம் கூறினார். பரசுராமனும் அவ்வாறே செய்து, தந்தையின் உதவியோடு மீண்டும் தாயை உயிர்பெறச் செய்தார். இந்த பாவம் நீங்க தந்தையும் மகனுமாக திருநின்றியூர் சிவனை வழிபட்டனர்.
சிறப்பு: பூமியில் புதைந்துபோன சிவலிங்கம், சோழமன்னனால் கண்டறியப்பட்டு ஒரு அனுஷ நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே இக்கோயில் அனுஷத்திற்கு உரியதானது. அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி பூஜையன்றும் சிறப்பு வழிபாடு செய்தால் செல்வவளம் உண்டாகும்.
இருப்பிடம்: மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை 4- இரவு 8.
போன்: 04364- 320 520
#கேட்டை:
கோயில்: பசுபதிகோயில் வரதராஜப்பெருமாள் கோயில்
தாயார்: பெருந்தேவி
தல வரலாறு: ராமானுஜரின் குருவான பெரியநம்பி, மார்கழி கேட்டையில் அவதரித்தவர். இவரது 105வது வயதில் சோழமன்னன் ஒருவன் ராமானுஜர் மீதிருந்த கோபத்தால் பெரியநம்பியின் கண்களைப் பறித்தான். அவர் பசுபதிகோயில் வரதராஜப் பெருமாளிடம் அடைக்கலம் புகுந்தார். அவரின் துன்பம் போக்கும் விதத்தில், பெருமாள் இங்கு மோட்சம் அளித்தார்.
சிறப்பு: பெரியநம்பியின் திருநட்சத்திர வைபவம் சிறப்பாக நடக்கும். கேட்டை நட்சத்திரத்தினர் வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாயன்று வரும் கேட்டையில் வழிபடுவது சிறப்பு.
இருப்பிடம்: தஞ்சாவூர்- கும்பகோணம் வழியில் 13கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை7- 9, மாலை 5.30- 7.30.
போன்: 97903 42581, 94436 50920
#மூலம்:
கோயில்: மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்
அம்மன்: புஷ்பகுஜாம்பாள்
தல வரலாறு: சிவன் ஆனந்ததாண்டவம் ஆடியபோது மிருதங்கம் வாசித்தவர் சிங்கி என்ற நந்திதேவர். இசையில் ஆழ்ந்து கண்ணை மூடியபடி தாளம் போட்டதால், நடனத்தைப் பார்க்க முடியவில்லை. அதனால், மப்பேடு வந்து சிவபூஜை செய்து இறைவனின் நடனத்தைக் கண்டு களித்தார். மெய்ப்பேடு என்பதே மப்பேடு ஆகிவிட்டது. சிங்கி வழிபட்ட சிவன் என்பதால் சிங்கீஸ்வரர் எனப்பட்டார்.
சிறப்பு: மூலநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரதோஷத்தன்று இங்கு வழிபடுவது சிறப்பு. இங்குள்ள நவவியாகரண கல் மீது ஏறி, நந்தியையும், மூலவரையும் ஒரே சமயத்தில் தரிசித்தால் ஆரோக்கியம் மேம்படும்.
இருப்பிடம்: சென்னை கோயம்பேடு- தக்கோலம் வழியில் 45 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை6- 10, மாலை 5.30-இரவு 7.30.
போன்: 94447 70579, 94432 25093
#பூராடம்:
கோயில்: கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: மங்களாம்பிகை
தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய கடுவெளிச்சித்தர் அருள்பெற்ற தலம் கடுவெளி. “கடுவெளி’ என்றால் “ஆகாசவெளி’. சோழமன்னன் ஒருவன் இங்கு கோயில் கட்டினான். ஆகாயத்திற்கு அதிபதியாக ஆகாசபுரீஸ்வரர் இங்கு வீற்றிருக்கிறார்.
சிறப்பு: இத்தலம் பூராடம் நட்சத்திரத்திற்குரியது. ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும் பூராடத்தன்று இங்கு வழிபடுவதாக ஐதீகம். அன்று சிவனுக்கு புனுகு சாத்தி வழிபட திருமண, தொழில்தடை நீங்கும்.
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து திருவையாறு 13 கி.மீ., அங்கிருந்து கல்லணை வழியில் 4 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை9-10, மாலை 5-6, பூராடத்தன்று: காலை 8- மதியம்1.
போன்: 94434 47826, 96267 65472
#உத்திராடம்:
கோயில்: கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: மீனாட்சியம்மன்
தல வரலாறு: படைப்புத் தொழிலைச் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவன் என்று பிரம்மா கருதினார். இந்த மமதையை அடக்க, பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒருதலையைக் கொய்தார் சிவன். தனது பாவம் தீர பிரம்மா, பூலோகத்தில் சிவனை வழிபட்ட தலம் கீழப்பூங்குடி. பழைய கோயில் அழிந்து போனதால் புதிய கோயில் கட்டப்பட்டது.
சிறப்பு: இங்குள்ள மீனாட்சி அம்மனின் நட்சத்திரம் உத்திராடம். இதில் பிறந்தவர்கள் பிரம்மபுரீஸ்வரரையும், மீனாட்சியையும் உத்திராடத்தன்று வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். பவுர்ணமியன்று சிவனுக்கு விசேஷ பூஜை நடக்கும்.
இருப்பிடம்: மதுரையிலிருந்து 45கி.மீ., சிவகங்கையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் ஒக்கூர் 12கி.மீ., அங்கிருந்து கீழப்பூங்குடி 3 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை7- 11, மாலை 5- இரவு8
போன்: 99436 59071, 99466 59072
#திருவோணம்:
கோயில்: திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோயில்
தாயார்: அலர்மேலுமங்கைத் தாயார்
தலவரலாறு: புண்டரீக மகரிஷியின் பக்திக்கு இணங்கி பெருமாள் பிரசன்னமான தலம் திருப்பாற்கடல். சந்திரன் ஒரு சாபத்தால் இருளடைந்தான். அவன் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி வருந்தினாள். இங்கு வந்து வழிபட்டு கணவரின் சாபம் நீங்கப் பெற்றாள்.
சிறப்பு: திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், மூன்றாம்பிறை ஆகிய நாட்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட நினைத்தது நிறைவேறும்.
இருப்பிடம்: வேலூர்- சென்னை வழியில் 20கி.மீ., தூரத்தில் காவேரிப்பாக்கம். இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 4.30- இரவு 7.30
போன்: 94868 77896,04177 254 929
#அவிட்டம்:
கோயில்: கீழ்க்கொருக்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: புஷ்பவல்லி
தல வரலாறு: கோரக்கசித்தர் ஒரு மடத்தில் தங்கியிருந்தார். இரவில் விழித்தபோது, அவரருகில் ஒருத்தி படுத்திருந்தாள். முந்தானை சித்தர் மீது கிடந்தது. இதற்கு பரிகாரமாக தன் கைகளை வெட்டிக் கொண்டார். சிவனருளால் கைகள் வளர்ந்தன. கையை வெட்டியதால் “கோரக்கை’ என்றும், குறுகிய கைகளால் வழிபட்டதால் “குறுக்கை’ என்றும் ஊருக்குப் பெயர் வந்தது. தற்போது “கொருக்கை’ எனப்படுகிறது.
சிறப்பு: அவிட்ட நட்சத்திரத்தன்று பிரம்மஞானபுரீஸ்வரர், பிரம்மாவுக்கு ஞானம் தந்ததால் இத்தலம் அவிட்டத்திற்கு உரியதானது. இந்த நட்சத்திரத்தினர் ஆவணி அவிட்டத்தன்று அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட்டால் யோக வாழ்வு அமையும்.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை11- மதியம்1, மாலை5- மாலை 6
போன்: 98658 04862, 94436 78579
#சதயம்:
கோயில்: திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: கருந்தார் குழலி
தல வரலாறு: தவமிருந்த அக்னிதேவனுக்கு சந்திர சேகரராக சிவன் காட்சியளித்து அருள்புரிந்த தலம் திருப்புகலூர். “புகல்’ என்றால் அடைக்கலம். அடைக்கலம் புகுந்தவர்களை ஆட்கொள் பவராக சுவாமி இங்கு வீற்றிருக்கிறார். வர்த்தமானேஸ்வரர், மனோன்மணி அம்பாளும் இங்கு வீற்றிருக்கின்றனர்.
சிறப்பு: திருநாவுக்கரசர் தன் 81ம் வயதில் சித்திரை சதய நாளில் இங்கு சிவனோடு இரண்டறக் கலந்தார். இதை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கும். சதய நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம், செல்வவளம் உண்டாகும்.
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம்- நாகப்பட்டினம் வழியில் 10கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 6- மதியம்12, மாலை 4- இரவு9
போன்: 04366 236 970
#பூரட்டாதி:
கோயில்: ரங்கநாதபுரம் திருவானேஸ்வரர் கோயில்
அம்மன்: காமாட்சி
தல வரலாறு: இந்திரனும், அவனது ஐராவத யானையும் பூரட்டாதிநாளில் திருவானேஸ்வரரை பூஜித்து நற்பலன் பெற்றனர். கோச்செங்கட்சோழன் கட்டிய முதல் மாடக்கோயில். இறைவன் இங்கிருந்தே காலச்சக்கரத்தைப் படைத்தார். கஜ கடாட்ச சக்தி விமானத்தின் கீழ் சுவாமி எழுந்தருளியிருக்கிறார்.
சிறப்பு: பூரட்டாதியன்று திருவானேஸ்வரரை வழிபட்டு ஏழு வண்ண ஆடைகளை ஏழைகளுக்கு தானம் அளித்தால் புத்திகூர்மை உண்டாகும். திருமணம், வேலைவாய்ப்பு தடையின்றி நடந்தேறும்.
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து திருவையாறு 20 கி.மீ., இங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி 17கி.மீ., அங்கிருந்து அகரப்பேட்டை வழியில் 2கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை7-9, மாலை 5.30-இரவு 7
போன்: 94439 70397, 97150 37810
#உத்திரட்டாதி:
கோயில்: தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய லட்சுமி, அகத்தியரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் வழிபட்ட தலம் தீயத்தூர். அவள், தினமும் ஆயிரம் தாமரை மலர்களால், சிவனை வழிபட்டதால் “சகஸ்ரலட்சுமீஸ்வரர்’ என்று பெயர் வந்தது. “சகஸ்ர’ என்றால் “ஆயிரம்’.
சிறப்பு: உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அவதரித்த தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷி ஆகியோர் அரூபவடிவில் சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க உத்திரட்டாதி நாளில் வருவதாக ஐதீகம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொங்கல் நைவேத்யம் செய்ய பணக்கஷ்டம் தீரும். செயல்பாடுகளில் தடை நீங்கும்.
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து ஆவுடையார்கோயில் 40கி.மீ., அங்கிருந்து திருப்புனவாசல் செல்லும் வழியில் 21கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை6- மதியம் 12
போன்: 99652 11768, 04371-239 212
#ரேவதி:
கோயில்: காருகுடி கைலாசநாதர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: சந்திரன் தன் மனைவியான ரேவதியுடன் சிவனருள் பெற்ற தலம் காருகுடி. “கார்’ எனப்படும் ஏழுவகை மேகங்களும் சிவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு “காருகுடி’ என்ற பெயர் உண்டானது. 1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி கோயிலைக் கட்டினான்.
சிறப்பு: ரேவதி நட்சத்திர தேவதை அரூப வடிவத்தில் (உருவமின்றி) தினமும் சிவனை வழிபடுவதாக ஐதீகம். ரேவதி நட்சத்திரத்தினர் இங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட நினைத்தது விரைவில் நிறைவேறும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும்.
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி 40கி.மீ, இங்கிருந்து தாத்தய்யங்கார் பேட்டை 21கி.மீ., அங்கிருந்து காருகுடி 5கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை
5- இரவு8
போன்: 97518 94339, 94423 58146